திங்கள், 23 ஏப்ரல், 2012

ஸ்டூடண்ட் டைரி



ஒருநாள் எங்கள் பள்ளியின் மைதானத்தில் நாங்கள் மாணவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்கள் பள்ளிஅறை சுவர்களுக்கு வர்ணம் அடித்திருந்தார்கள். விளையாட்டை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்த சமயம். உயர்வகுப்பு படித்துக் கொண்டிருந்த  சில மாணவர்கள் கரிதுகளாலும், பாக்கெட்டில் வைத்திருந்தா பென்சிலாலும் அதில் அவர்களின் பெயர்களையும், கட்சித்தலைவர்களின் பெயர்களையும் எழுதி  வாழ்க! ஒழிக!  என்று எழுதியிருந்தார்கள். மறுநாள் காலை பிரேயர் கூடியது. அப்போது வந்த தலைமையாசிரியர் கடவுள் வாழ்த்துப் பாடும் போது சுவரில் கிறுக்கியிருந்த பெயர்களை பார்த்துவிட்டார். பிரேயர் முடிந்தும் மாணவர்களை நிற்கச்சொன்னார். மாணவ மாணவிகள் அனைவரும் காத்திருந்தார்கள். அப்போது சுவரில் கிறுக்கியது யார் என்று கேட்டார். மாணவர்கள் யாரும் சொல்லவில்லை. எங்களுக்கு அடுத்த உயர் வகுப்பு மாணவர்கள் மட்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரும் சொல்லவில்லை. உடனே எங்கள் ஆசிரியர் யாரும் தங்கள் தவறை ஒத்துக் கொள்ளாததால் நாளை பிரேயரில் இங்கே ஒரு உண்டியல் வைக்கப்படும் அதில் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஐந்து ரூபாய்கள் போட வேண்டும். இதுதான் தண்டனை இது தவறு செய்த மற்ற மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். மொத்த மாணவர்களுக்கும் நாம் செய்வது தவறு என்பது புரியும். வசூலாகும் மொத்த பணத்திலும் பெயிண்ட் வாங்கி மீண்டும் அடித்துவிட்டு அதன் மேல் தலைவர்களின் படங்கள், பொன்மொழிகள் எழுதப்போகிறோம். ஆசிரியர்கள் இந்தப்பணத்தில் டீ,வடை வாங்கி சாப்பிட இங்கே உண்டியல் வைக்கப்பட வில்லை என்றார்.
மறுநாள் மாணவர்கள்நிறையபேர் காசை கொண்டு வந்து போட்டார்கள். மேலும் .ண்டியலில் போட விரும்பாதவர்கள் ஒவ்வொரு வகுப்பிலம் மாணவர்களே வசூல் செய்து கொண்டு வந்தும் உண்டியலில் போட்டார்கள். நாம் படிக்கும் பள்ளியையும், வீட்டையும் நாம் தானே சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

ஆர்.ஜனார்தனன்.
எட்டாம் வகுப்பு,
ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி
துறையூர்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

ரூபிக் கியூப்பில் உலக சாம்பியன்!



உடற்திறன் சார்ந்த விøளாட்டுக்களை அவுட்டோர் கேம் என்றும் , அறிவாற்றல் சார்ந்த விளையாட்டுகளை இன்டோர் கேம் என்று அழைப்பர். இன்டோர் கேம் வகையில் கேரம், செஸ் போல ரூபிக்கியூப் இப்போது  பிரபலம். இந்த விளையாட்டில் 11 வயதில் உலகசாம்பியன் பட்டத்தை வென்றவர் திருச்சியைச் சேர்ந்த பெர்னெட் ஒர்லாண்டோ.
இவருடைய அப்பா ஜான்லுõயி. சர்வதேச நினைவாற்றல் பயிற்சியாளராக இருக்கிறார். அம்மா பவுலின் செல்வராணி. அரசு பள்ளியில டீச்சர். அக்கா காலேஜ்ல படிக்கிறார். பெர்னெட் ஒர்லாண்டோ இப்போது திருச்சி செயிண்ட் ஜேம்ஸ் மெட்ரிக் ஹையர் செகண்ட்ரி பள்ளியில ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
*ரூபிக் கியூப் விளையாட்டு என்றால் என்ன?
1980ம் ஆண்டு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எர்னோ ரூபிக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதுமையான விளையாட்டு இது. ஆறு பக்கங்கள் கொண்ட பெரிய கனசதுரத்தில் (கியூப்) ஐந்து அடுக்குகள் கொண்ட சிறு கன சதுரங்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். இந்த சிறு கனசதுரங்களை ஆறு புறமும் திருப்பி அமைக்க கூடிய வகையில் இருக்கும். இந்த கனசதுரங்களை மிகக்குறைந்த நேரத்தில்  ஆறு பக்கங்களிலும் ஒரே வண்ணம் வரும்படியாக மாற்றி அமைப்பதில் தான், இந்த விளையாட்டின் திறமை அடங்கியுள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் இந்த கனசதுரங்களை ஒரே வண்ணத்தில் மாற்றி அமைப்பவர்களே வெற்றியாளர்கள்.  இதற்கு அதிக நினைவாற்றலும் , அறிவாற்றலும் அடிப்படையாகும்.
*இதில் எப்படிஆர்வம்  வந்தது?
தந்தையைப் பார்த்து கற்றுக் கொண்டேன். எனது ஆர்வத்தை பார்த்த என் தந்தை எனக்கு பயிற்சி கொடுத்தார். அந்த பயிற்சிஇந்த விளையாட்டில் என்னை பிரகாசிக்கச் செய்தது. பல வெற்றிகளை பெற வைத்தது. என்   சாதனைகளுக்கு என் தந்தையே காரணமாக இருக்கிறார்.
உங்களின் சாதனைப் பட்டியல் விவரம்?
 இவ்விளையாட்டில் 2003ம் ஆண்டு கனடா நாட்டில் 2வது உலக கோப்பை போட்டியும், 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் 3வது உலககோப்பை போட்டியும் 2007ம் ஆண்டு ஹங்கேரியில் 4வது உலகக்கோப்பை  போட்டியும் நடந்தது.  அப்போது சக போட்டியாளர்களாக நானும், என் அப்பாவும் கலந்து கொண்டோம். அந்த நாடுகளுக்கு செல்வதற்கு எந்த வித அரசு நிதிஉதவியும் இல்லாமல் எனது தந்தையே சொந்த செலவில் அழைத்துச் சென்றார். குருவுக்கு குருவாகவும் , அப்பாவுக்கு அப்பாவாகவும்  இருந்து, அந்த சமயத்தில் என் அப்பாவே பட்ட கஷ்டங்கள் எனக்கு உத்வேகத்தைத் தந்தது. அதனால் இந்த விளையாட்டில் என்னால் சாதிக்க முடிந்தது. பத்துவயதில் ஆறு ஆசிய சாதனை களையும்,  11வதுவயதில் 3 ஆசிய சாதனைகளையும் முறியடித்தேன். 2006ம் ஆண்டு நெதர்லாந்தில் டச் ஓபன் ரூபிக்கியூப் போட்டியிலும், 2007ம் ஆண்டு ஜப்பானிலும், ஹங்கேரியில் நடந்த 4வது ரூபிக்கியூப் போட்டியிலும் கலந்துகிட்டு பல பதக்கங்களை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறேன். 11 வது வயதில் உலக சாம்பியன் பட்டத்தை ஜெயித்திருக்கிறேன். இந்த ஆண்டு பிப்ரவரியில் கான்பூரில் இந்தியன் ஓபன் போட்டியிலும்,  சென்னையில் நடந்த சாஸ்த்ரா ஓபன் போட்டியிலும் இந்திய சாம்பியன் பட்டத்தை ஜெயித்திருக்கிறேன்.புரபசனல் கியூப் போட்டியில கண்ணைக் கட்டிக்கிட்டு உலக அளவில பெரியவங்களோட போட்டியிட்டு ஜெயிச்சிருக்கேன். இன்னும் சொல்லிக்ணுட்டே போகலாம்...
* பெருமையாக நினைப்பது?
உலகில் வேறெந்த விளையாட்டிலும்  இப்படி தந்தை, மகன் சேர்ந்தாற்போல விளையாடி வெற்றி பெற்றது இல்லைன்னு நினைக்கிறேன். எனக்கு,பள்ளியிலும் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மே<லும் விளையாட்டில் சாதிக்க ஊக்கப்படுத்து கிறார்கள். சர்வ தேச அளவில் இன்னும் பல சாதனை படைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என்னைப்போன்ற மாணவர்கள் ரூபிக் கியூப் விளையாட்டில் சாதிக்க பலர் முன் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

அஷ்டாவதானி அக்ஷரா ஸ்ரீ


யங் ஜீனியர்ஸ்

அஷ்டாவதானி அக்ஷரா ஸ்ரீ

அக்ஷரா ஸ்ரீ யின் சாதனைகளைப் பார்த்தால் இந்த இளம் சாதனையாளரை அஷ்டாவதானி சாதனையாளர் என்றே சொல்லலாம். இவர் பல துறைகளில் பலசாதனைகள் படைத்திருக்கிறார்.


* உங்களுடைய குடும்பம் பற்றி சொல்லுங்களேன்?
அப்பா ரவிச்சந்திரன்எலும்பு மருத்துவர். அம்மா கௌரி ரவிச்சந்திரன் பெண்கள் சிறப்பு மருத்துவராக இருக்காங்க, அண்ணன் ஆனந்த் 9ம் வகுப்பு படிக்கிறார். தம்பி  அரவிந்தாக்சன் 3ம் வகுப்பு படிக்கிறான்.நான் 8ம் வகுப்பு படிக்கிறேன். நாங்கள் மூவரும் ராமநாதபுரத்தில் உள்ளநேஷனல் அகாடமி மாண்டிச்சோரி  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  படிக்கிறோம்.

* பல சாதனை செய்து வரும் உனக்கு குறிப்பாக  எந்தெந்த துறைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கு? 
கர்நாடக சங்கீதம் பாட ஆசை. அதனால், கர்நாடக சங்கீதத்தை முறைபடி ஆரம்பநிலையில் இருந்துசங்கீதபோசனம் கலைவாணி மேடம் கிட்ட கத்துக்கிட்டேன்.
அடுத்து எனக்கு நாட்டியம் என்றால் கொள்ளைப்பிரியம். எனவே,  பரதநாட்டிய கலையை  ரவிமாஸ்டர்க்கிட்ட கத்துக்கிட்டேன்.பரதநாட்டியம் ஓரளவு ஆட தெரிந்தப்பிறகு கோயில்களில் ஆடியிருக்கேன்.
கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டதால் நல்ல பாடமுடிகிறது. பாட்டு கச்சேரி பலமேடைகளில், டிவி நிகழ்ச்சிகளில் பாடியிருக்கேன்.
எனக்கு  ஏழு வகையான இசைக் கருவிகளை  இசைக்கத்தெரியும். அது  புல்லாங்குழல் , மௌத்ஆர்கன், புல்புல்தாரா, ஜலதரங்கம், கிதார், வீணை, கீபோர்டு ஆகியன. இந்த இசைக்கருவிகளில் இப்போது வாசிச்சுக்கிட்டிருக்கேன். இந்த இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு பொதிகை, ராஜ்டிவி, ஸ்டார் விஜயிலும் சில இசை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். குழந்தைகளுக்கான போட்டி இசை நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு பரிசுகளும் வாங்கியிருக்கேன்.

* கலைகளில் அசத்தும் நீங்க விளையாட்டில் எப்படி?
விளையாட்டு யாருக்குத்தான் பிடிக்காது? எனக்கு விளையாட்டில் எப்போதுமே ஆர்வம் உண்டு.
நீச்சல், ஸ்கேட்டிங், சைக்கிளிங் போட்டிகளில்  மாவட்ட அளவில் பல முறை முதல் பரிசு வாங்கியிருக்கிறேன்.
 குழுவிளையாட்டுகளான கோகோ, துரோபால் விளையாட்டிலும்  ஐந்தாம் வகுப்பு படிக்கறப்ப போட்டிகள்ல கலந்துக்கிட்டு நிறைய பரிசுகள் வாங்கியிருக்கேன்.
நினைவுத்திறன் போட்டிகள், ஓவியம் பெயிண்டிங்கிலும் முதல்பரிசுகள், ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதும் போட்டியிலும் 68 ம்வகுப்பு மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கியிருக்கேன். இப்படி நிறைய மாதாந்திர இலக்கியப் போட்டிகள், மாவட்ட , மாநில அளவிலான போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்கியிருக்கேன்.
 பொழுதுபோக்குன்னு சொன்னாலே விளையாட்டும், ஓவியமும் தான் அதிலும் பொழுது போக்குக்கு மேல ஆர்வம் செலுத்தறதால  அந்த பொழுது போக்கும் என்னுடைய திறமைகளை வளர்த்துக்கறதில ஒண்ணாக இருக்கு.  சரின்னு டிவியை பொழுது போக்காக பார்த்தாலும் அதிலும் சங்கீதம் சம்மந்தப்பட்ட விசயங்கள் வர்றப்ப அதிலிருந்தும் ஏதாவது விசயங்கள் கத்துக்க முடியுது. என்னுடைய லட்சியம் அப்பா அம்மாவைப்போல நானும் மருத்துவராகி பலருக்கும் சேவை செய்யணும் என்கிறார் இந்த குட்டி சாதனையாளர்.
 செல்வகுமார். 

ரூபிக் கியூப்பில் உலக சாம்பியன்!


உடற்திறன் சார்ந்த விøளாட்டுக்களை அவுட்டோர் கேம் என்றும் , அறிவாற்றல் சார்ந்த விளையாட்டுகளை இன்டோர் கேம் என்று அழைப்பர். இன்டோர் கேம் வகையில் கேரம், செஸ் போல ரூபிக்கியூப் இப்போது  பிரபலம். இந்த விளையாட்டில் 11 வயதில் உலகசாம்பியன் பட்டத்தை வென்றவர் திருச்சியைச் சேர்ந்த பெர்னெட் ஒர்லாண்டோ.
இவருடைய அப்பா ஜான்லுõயி. சர்வதேச நினைவாற்றல் பயிற்சியாளராக இருக்கிறார். அம்மா பவுலின் செல்வராணி. அரசு பள்ளியில டீச்சர். அக்கா காலேஜ்ல படிக்கிறார். பெர்னெட் ஒர்லாண்டோ இப்போது திருச்சி செயிண்ட் ஜேம்ஸ் மெட்ரிக் ஹையர் செகண்ட்ரி பள்ளியில ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
*ரூபிக் கியூப் விளையாட்டு என்றால் என்ன?
1980ம் ஆண்டு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எர்னோ ரூபிக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட புதுமையான விளையாட்டு இது. ஆறு பக்கங்கள் கொண்ட பெரிய கனசதுரத்தில் (கியூப்) ஐந்து அடுக்குகள் கொண்ட சிறு கன சதுரங்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும். இந்த சிறு கனசதுரங்களை ஆறு புறமும் திருப்பி அமைக்க கூடிய வகையில் இருக்கும். இந்த கனசதுரங்களை மிகக்குறைந்த நேரத்தில்  ஆறு பக்கங்களிலும் ஒரே வண்ணம் வரும்படியாக மாற்றி அமைப்பதில் தான், இந்த விளையாட்டின் திறமை அடங்கியுள்ளது. மிகக்குறைந்த நேரத்தில் இந்த கனசதுரங்களை ஒரே வண்ணத்தில் மாற்றி அமைப்பவர்களே வெற்றியாளர்கள்.  இதற்கு அதிக நினைவாற்றலும் , அறிவாற்றலும் அடிப்படையாகும்.
*இதில் எப்படிஆர்வம்  வந்தது?
தந்தையைப் பார்த்து கற்றுக் கொண்டேன். எனது ஆர்வத்தை பார்த்த என் தந்தை எனக்கு பயிற்சி கொடுத்தார். அந்த பயிற்சிஇந்த விளையாட்டில் என்னை பிரகாசிக்கச் செய்தது. பல வெற்றிகளை பெற வைத்தது. என்   சாதனைகளுக்கு என் தந்தையே காரணமாக இருக்கிறார்.
உங்களின் சாதனைப் பட்டியல் விவரம்?
 இவ்விளையாட்டில் 2003ம் ஆண்டு கனடா நாட்டில் 2வது உலக கோப்பை போட்டியும், 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் 3வது உலககோப்பை போட்டியும் 2007ம் ஆண்டு ஹங்கேரியில் 4வது உலகக்கோப்பை  போட்டியும் நடந்தது.  அப்போது சக போட்டியாளர்களாக நானும், என் அப்பாவும் கலந்து கொண்டோம். அந்த நாடுகளுக்கு செல்வதற்கு எந்த வித அரசு நிதிஉதவியும் இல்லாமல் எனது தந்தையே சொந்த செலவில் அழைத்துச் சென்றார். குருவுக்கு குருவாகவும் , அப்பாவுக்கு அப்பாவாகவும்  இருந்து, அந்த சமயத்தில் என் அப்பாவே பட்ட கஷ்டங்கள் எனக்கு உத்வேகத்தைத் தந்தது. அதனால் இந்த விளையாட்டில் என்னால் சாதிக்க முடிந்தது. பத்துவயதில் ஆறு ஆசிய சாதனை களையும்,  11வதுவயதில் 3 ஆசிய சாதனைகளையும் முறியடித்தேன். 2006ம் ஆண்டு நெதர்லாந்தில் டச் ஓபன் ரூபிக்கியூப் போட்டியிலும், 2007ம் ஆண்டு ஜப்பானிலும், ஹங்கேரியில் நடந்த 4வது ரூபிக்கியூப் போட்டியிலும் கலந்துகிட்டு பல பதக்கங்களை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறேன். 11 வது வயதில் உலக சாம்பியன் பட்டத்தை ஜெயித்திருக்கிறேன். இந்த ஆண்டு பிப்ரவரியில் கான்பூரில் இந்தியன் ஓபன் போட்டியிலும்,  சென்னையில் நடந்த சாஸ்த்ரா ஓபன் போட்டியிலும் இந்திய சாம்பியன் பட்டத்தை ஜெயித்திருக்கிறேன்.புரபசனல் கியூப் போட்டியில கண்ணைக் கட்டிக்கிட்டு உலக அளவில பெரியவங்களோட போட்டியிட்டு ஜெயிச்சிருக்கேன். இன்னும் சொல்லிக்ணுட்டே போகலாம்...
* பெருமையாக நினைப்பது?
உலகில் வேறெந்த விளையாட்டிலும்  இப்படி தந்தை, மகன் சேர்ந்தாற்போல விளையாடி வெற்றி பெற்றது இல்லைன்னு நினைக்கிறேன். எனக்கு,பள்ளியிலும் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மே<லும் விளையாட்டில் சாதிக்க ஊக்கப்படுத்து கிறார்கள். சர்வ தேச அளவில் இன்னும் பல சாதனை படைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என்னைப்போன்ற மாணவர்கள் ரூபிக் கியூப் விளையாட்டில் சாதிக்க பலர் முன் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

 செல்வகுமார்.

ஒரு தபால்தலையில் 324 ஓவியம் தீட்டியவர்!



சிவகுரு பாலாஜி. இவர் ஓவியத்தில் வித்தகர் என்று யாராவது சொன்னால் சட்டென்று நம்பவே முடியாது. ஆனால், அவர் வரைந்திருக்கும் ஓவியங்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்! ஆ! இவரா, இவ்வளவு நுணுக்கமான ஓவியங்களை வரைந்திருக்கிறார் என்று. இவரை யங் ஜீனியஸ் என்று வாயார அழைக்கலாம். ஓவியத்தில் மட்டுமா இவர் வித்தகர்?
இறகுப்பந்து விளையாட்டு, நுண்கலை சிற்பங்கள் உருவாக்குவதில் சாதனை என்று சிறுவயதிலேயே பல திறமைகளையும் கொண்டு வளர்ந்து வருகிறார்.
சிவகுருபாலாஜி,ஈரோடு  எஸ்விஎன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பத்தாம்வகுப்பு படித்துவருகிறார். இவரின் பெற்றோர்கள் சுந்தர் பவர்லுõம் மெஷினுக்கான ஸ்பேர்பார்ட்ஸ் விற்பனை செய்கிறார். அம்மா சாந்தி பட்டதாரி ஆசிரியர். தம்பி சிவசூர்யவாசன் மூணாம்வகுப்பு படிக்கிறார்.
உங்களது திறமைகள் பற்றி?
ஐந்து வயதிலிருந்தே எனக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. பள்ளியில் நடக்கும் அனைத்துப் ஓவியப்போட்டிகளிலும் கலந்து கொண்டு நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன்.
தினமலர் சிறுவர்மலர் நடத்திய வண்ணம் தீட்டும் போட்டியில் முதல்பரிசு கிடைத்தது.
ஓவியத்தில் உங்கள் சாதனையாக எதை சொல்வீர்கள்?
 ஒரு அடி நீள, அகல திருவள்ளுவர் படத்திற்குள் 1330 திருக்குறளையும் எழுதி, 2.5 செமீ நீள, அகல புத்தகத்தில் பத்து குறள் வீதம் எழுதியுள்ளேன். அவற்றை பள்ளி  அளவில் ஓவியக்கண்காட்சியில் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினேன். ஒரு ரூபாய் ஸ்டாம்பின் பின்புறம் 324 ஓவியங்கள்  வரைந்திருக்கிறேன். சாக்பீஸில் கிரீடம்,மிக்கிமவுஸ், சங்கிலி,வேன்,
கார், ரயில், வாள் போன்றவற்றை செதுக்கியுள்ளேன்.
ஓவியம் தவிர வேறு எதிலாவது கவனம் செலுத்துகிறீர்களா?
ஓரிக்காமி என்கிற கலைமூலம் காகித வடிவமைப்பு செய்வது. நிர்வாகத்தில் உபயோகமற்ற கழிவு பொருட்களி லிருந்து புதிய பொருட்களை உருவாக்குவது. ஆங்கிலத்தில் இலக்கணப் பிழை யில்லாமல் சரளமாக பேசுவது, தமிழில் கதைகள்மற்றும் கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறேன். மதுரை பாரதி யுவகேந்திராவின் யுவஸ்ரீகலாபாரதி விருதை பெற்றிருக்கிறேன்.
யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய இறகுப்பந்து போட்டியில் ஈரோடு மாவட்ட ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 2007ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றுள்ளேன்.செஸ் மற்றும் கேரம் விளையாடுவேன்.
எதிர்கால ஆசை?
இயற்பியல் துறை அல்லது நானோ தொழில்நுட்பத் துறையில் சாதித்து தமிழ்நாட்டையும் , இந்தியாவையும் உலக அரங்கில் பெருமைப்பட வைக்கவேண்டும்.
 செல்வ குமார்

குட்டி வாரியார்



"பிஞ்சில் பழுத்தப்பழம்' என்று பிரகதீஸ்வரனை
சொன்னால் பொருந்தும். 2ம் வகுப்பு படிக்கும் போதே பல பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றவர். மேடைப் பேச்சுத்திறன் வளர வளர இன்று ஆன்மிக சொற்பொழிவு புரிகிறார். இவரை மக்கள் "குட்டி வாரியார்' என்றே அழைக்கின்றனர்.இவர்,மதுரையில் சிஇஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த வயதில் எப்படிஆன்மிகம் பற்றி பேச முடிகிறது?
நான் 2ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பேசுவேன். மேடைப் பேச்சு பயம் எனக்கு இல்லாததால் மேலும் மேலும் பேச்சுத்திறமையை வளர்த்துக்கொண்டேன். என் தந்தை ஒரு தமிழாசிரியர் என்பதால் வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருந்தார். அவற்றை எல்லாம் படித்தேன். தாத்தா, பாட்டிகள் சொல்லிய புராணக்கதைகள் பல கேட்டேன். இத்துடன் கடவுளின் அருளும் எனக்கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒரு முறை கிருபானந்தவாரியாரின் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அந்தப்புத்தகக்தைப்படித்ததிலிருந்து, கிருபானந்தவாரியார் போல நாமும் பேச வேண்டும் என்று விருப்பபட்டேன். அதனால், அவர் பேசிய சொற்பொழிவுகளை எல்லாம் சிடியில் பலமுறைக்கேட்டேன். இவை எல்லாம் என் சிறியவயதிலேயே நடந்ததால், இந்த வயதில் ஆன்மிக சொற்பொழிவு செய்யமுடிகிறது.
உங்கள் கன்னிப் பேச்சு எங்கே அரங்கேற்றம்?
அப்போது 6ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மதுரை எல்ஐசி காலனியில் இருக்கும் சக்தி விநாயகர் கோயிலில் மார்கழி மாசம் 30 நாளும் வெவ்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு செய்தேன்.என் சொற்பொழிவை பலரும் பாராட்டினார்கள். இதனால், பலர் கோயில்களுக்கு என்னை சொற்பொழிவு செய்ய அழைத்தனர். நானும் மறுக்காமல் செய்து வருகிறேன்.
குட்டிவாரியர் என்ற அடைமொழி கிடைத்தது எப்படி?
என் சொற்பொழிவை ரசித்துக்கேட்ட ஒரு மூதாட்டி, என்னிடம் வந்து,"நீ நல்லா பேசுகிறார். அப்படியே கிருபானந்தவாரியர் பேசுவது போல இருக்கிறது. அவர் மறைந்தப்பிறகு, உன் பேச்சில் தான் அவரின் பேச்சு சாயலைக்கண்டேன். என்று பாராட்டி,"நீ வாரியாரின் வாரிசு! இனிமேல் நீதான் குட்டிவாரியார்' என்றார். அவர் வாயாறழைத்த அந்த அடைமொழியே என் பெயருக்கு முன்னதாக அமைந்து விட்டது.
இதுவரை எத்தனை முறை மேடையில் ஆன்மிக சொற்பொழிவு செய்திருக்கிறீர்கள்?
பேசிய மேடைகளையும், ஊர்களையும் அவ்வளவாக நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும் 500 மேடைக்குமேல் சொற்பொழிவு செய்திருப்பேன்.
படிப்பில் எப்படி?
அம்மாவும் அப்பாவும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்வேன். 80 சதவீதம் மார்க் எடுத்துவிடுவேன். மற்றபடி படிப்புக்கு எந்தவிதத்திலும் என் சொற்பொழிவு தொந்தரவாக இருந்ததில்லை.
எதிர்கால லட்சியம்?
எம்பிஏ படிக்க வேண்டும் என்பது என் லட்சியமாக இருக்கிறது. படித்து முடித்துவிட்டு ஷேர்மார்க்ககெட் செய்யவேண்டும் என்பது என் எண்ணம். அத்துடன், தொடர்ந்து இந்த ஆன்மிக சொற்பொழிவையும் தொடரவேண்டும் .
வேறு எதில் நாட்டம்?
பொழுது போக்கு என்பது எனக்கு இசையை ரசிப்பது தான். அப்புறம் கம்யூட்டர் மீது ஆர்வம் உண்டு. மிருதங்கம், கிடார், கீபோர்டு, வயலின், வாய்ப்பாட்டு வாசிப்பேன். அடிப்படையில் இருந்து கற்றும் வருகிறேன்.

பின்னணி குரலில் பின்னி எடுக்கும் யாமினிப் பிரியா!



நாம் பார்க்கும் திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில் நடிகர், நடிகை, குழந்தை நட்சத்திரங்கள் எல்லாருமே தங்கள் சொந்தக்குரலில் பேசி நடிப்பதில்லை. அவர்களுக்காக நல்ல குரல் வளமுள்ள டப்பிங்  கலைஞர்குரல்கொடுப்பார்கள்.  டப்பிங் கலைஞர்கள் தங்கள் குரல்வளத்தால் நடிகர்களின் நடிப்பு, உதட்டசைவுக்கு ஏற்ப,குரல் நடிப்பு செய்வார்கள். இந்த டப்பிங் துறையில் 8வயதிலேயே காலடி வைத்து, 60 க்கும் மேலான படங்கள், தொடர்கள், கார்ட்டூன் படங்களில் டப்பிங்கில் அசத்திக்கொண்டிருப்பவர் யாமினி பிரியா!  அவர் சிறுவர் மலர் குட்டீஸ்களுடன் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
உங்களைப் பற்றி சொல்லுங்களேன்...?
நான் இப்ப 11வது படிக்கிறேன். அம்மா சங்கரி, அப்பா வாசுதேவன். இருவருமே தனியார் வங்கியில் பணிபுரிகிறார்கள். எனக்கு ஒரு செல்லமான தங்கை உண்டு. அவள் பெயர் பாக்யலட்சுமி. அவளும் என்னைப்போலவே டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருக்கிறாள்.
டப்பிங் துறைக்கு எப்படி வந்தீங்க?
அது 8 ஆண்டுக்கு முன்பு நடந்த விஷயம்.  குழந்தை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தேவைன்னு ஒரு விளம்பரம் வந்தது. அதை பார்த்து நான் விண்ணப்பித்தேன். அதை சீனியர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினி கொடுத்திருந்தாங்க. நேரில் போய் பார்த்தேன். அவங்க தான் எனக்கு குருவாக இருந்து 6 மாதம் டப்பிங் கொடுப்பதில் இருக்கும் பல நுட்பங்களை சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க கற்றுதந்த பாடமும்,நடிகர்.ராதாரவி சார் கொடுத்த ஒத்துழைப்பும் தான் இன்று என்னை ஒரு நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் நிலைக்கு கொண்டுவந்திருக்கு.
நீங்க டப்பிங் கொடுத்த படங்கள், சீரியல்கள் பற்றி...?
புதியகீதை, சச்சின், ஜில்லுன்னு ஒரு காதல் இப்படி பல படங்களும்,
குறும்படங்களுக்கும் டப்பிங் கொடுக்கிறேன்.  "தேவிதரிசனம்' "அய்யப்பன்'  "ராஜராஜேஸ்வரி' "வேப்பிலைக்காரி' "மைடியர் பூதம்' இப்படி பல டி.வி.சீரியல்களில் வரும் குழந்தை கதாபாத்திரங்களுக்கு  டப்பிங் குரல் கொடுத்து வருகிறேன்.
டப்பிங்கில் இருப்பதால் படிப்பு எப்படி இருக்கிறது?
நன்றாகதான் படித்து வருகிறேன். முதலில் கொஞ்சம் நேரங்கள் சரிபடாமல் இருந்தது. இப்போது அந்தப் பிரச்னையே இல்லை. எனக்கு கிடைக்கும் நேரத்தில் டப்பிங் கொடுத்துவர சவுகரியமாக இருக்கிறது. அதனால் படிப்புக்கு அது தடையாக இருப்பதில்லை.
நீங்கள் குரல் கொடுத்து, நல்ல பெயர் வாங்கித்தந்த கதாபாத்திரம் எது?
எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த கேரக்டர் டோரா! அந்த டோரா கேரக்டருக்கு நான் டப்பிங் குரல்கொடுத்ததால் குழந்தைகள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
எதிர்காலத்தில் என்னவாக ஆசை?
எடிட்டிங், டப்பிங்கில் விருப்பம் இருக்கிறது. கலாமாஸ்டரிடம் டான்ஸ் கற்றுகிட்டு வருகிறேன். நல்ல ரோல் கிடைத்தால் நடிக்கவும் விரும்புகிறேன்.
 தேவராஜன்